Pages

6.05.2017

மரணமெனும் பேரெழில் ஒளிந்துகொண்டு முகம் காட்ட மறுக்கிறது.
சூறாவளியில் ஒரு சுழல்
மையத்தில் சிக்குண்டு வானேக
செயற்கைக்கோள் வழி 
ஆக்கிரமிப்பின் வலைத்தேடல்
கீறிய இரும்பு முட்கள் சிதைத்த 
பிணங்கள் மிதக்கும் பால் வெளி
கண்டு அலறி கீழே விழுகிறேன்.
விடிந்த பின்னும் இருள் ஆட்சி செய்யும் இரவு .