Pages

1.06.2013

கவண்  கல் !

காக்கைக்  கூட்டத்தில் கல் விழுந்தது

கலைந்து போயின மாப்பிள்ளைக்  காகங்கள் !

 விழுந்தது என்னவோ என் சொல்லே!

சொன்னது என்னசுடு சொல்லா  !

பேடிகளைத்  தாக்கிடும் கவண்  கல்லா !

பெண் என்ன இங்கே  தனித்தீவா !

கரைகள் இரண்டை ஒதுக்கிவிட்டு 

கடல் போய்   சேரும் நதிகள் உண்டா  !

ஆணுக்கு அம்மா அவன் வீட்டுத்தலைவி !

அப்பாவோ அடக்கி வாழும் தனிச்சீமான் !

பெண்ணைப்  பெற்றவர் மட்டும் நடுவீதயிலா ! 

அன்புடன் பெண்ணுடன்  சொந்தம் கொண்டாடிட 

பெற்ற பாசம் பரிவாய்த்  தந்திட  தடைகள் 

இங்கே பெண்ணைப்  பெற்றவர்களுக்கு மட்டுமா !

பெற்றோர் சொத்து பெண்ணுக்கும் சமம் 

கேட்டு வாங்கிட துணைக்குச்   சட்டம் 

"ஆணோ   பெண்ணோ  இரண்டே  போதும்  "

அடுக்கு மொழியில் கு.க விளம்பரம் !

கேட்டவர் பெண்ணுடன்   விட்டிருந்தால் 

வயோதிகம் தாங்கவும் , வைத்துக்  காக்கவும் 

பெண்ணாகப்    பிறந்தவள் புறக்கணிப்பாளா !

பெண்களை பெற்றோர் ஒதுக்கப்பட்டால்! 

மாப்பிள்ளை கழுகுகள் பிணம் தின்னுமா !

" சோறிட உழைத்தல் ஆணின் கடமை "

சொல்லிச்சென்றவர் மண்ணாகி விட்டார் !

அந்த உன்னதத்  தொழிலின் பாதிச்  சுமையையும்  

பெண்ணின் சிலுவையென   தூக்கி வைத்தப்பின் 

அணுக்கு மட்டும் ஏன்  இங்கே தணிச்சலுகை  ?

அவன் பெற்றோர் மட்டும் ஒட்டிக்கொண்டு 

அவனுடன் வாழ ஏன்  கடைசிவரை  உரிமை !

முகம் தூக்கிப்பார்கும் காக்கை கூட்டங்கள் 

 மறந்து என்னைப்  பார்க்க 

வாய் பொத்தி நின்றனர் என்னைப் பெற்றோர் !.

அவர்களைச் சற்றே ஒதுங்கச்சொல்லி 

"என்னுடன் பெற்றோர் வந்திடுவார் .

 அவர்களைப்  போற்றிக் காத்திடல் என் பணி  என்றேன் "

மாப்பிள்ளைக் காகங்கள் கலைந்து  போயின !

விழுந்தது என்னவோ இச்சொல்லேதான் !

சொன்னது என்ன சுடு சொல்லா !

பேடிகளைத் தாக்கிடும்  கவண்  கல்லா !

 

 

 

No comments: