Pages

1.06.2013

மாட்டுக்கு  இழிவு !

நல் துணைக்காய்  தம் நெஞ்சில்
ஏக்கம் வளர்த்து
சொல்லிடும்
துணிவில்லா
இக்கோழைப்  பெண்கள்!
மாட்டைப்போல கால் அகட்டி
கூவிட   முடியாது !
கூவினால்,  சாட்டையென
சொல்லம்பு சுழன்று வரும் .
சாட்டைக்கு முதுகு காட்டும்
மாட்டைப்போல
 இச்சொல்லம்பு தாங்கவும்
உரமில்லாப்  பெண்ணை!
மாடென்றே சொல்வதும்
இழிவே என்பேன்
மாட்டுக்கு இழிவே என்பேன் !
 

No comments: