Pages

1.12.2013

who is a writer (tamil)

      ,            
 எழுத்தாளனின் கடமை


ஒரு ஈசல் பூச்சியின்  சிறகுகளைப்போன்ற எழுத்தாளனின் மனம்  எதையும் தாங்க முடியாமல் நடுங்கும்பொழுது முறிந்து போகாமல் இருக்க குமுறி வெடிக்கிறது. காற்றில் சிருகுகளே பகையாக வாழ்வை அழிக்கும் விஷமாய்

இருப்பதை அறிந்த ஈசல்  பூச்சிகள் கூட அவைகளை உதிர்த்துவிட்டு தரையில் ஊர்கின்றது . உதிர்த்தல் அச்சிறிய உயிருக்கு வலியான ஒன்று என்றாலும் வாழ்க்கை நிச்சயமாகின்றது.  இது போல உதிர்வது தான்வார்த்தைகள். உதிர்ப்பவன்   வலி உணர்கிறான். உள்ளே உறங்கும் உணர்ச்சிகளை வெளியுலக பொய்மையும் கீழ்மையும் உசிப்பிவிடும்பொழுது 'லார்வவில்' நனைந்த  எரிச்சல் நகக்கண்ளைக்  கூட சுடும் .அந்த தகிப்பு தாங்க முடியாது படபடக்கும் உள்ளத்தை ஸ்திரமாக்கிக்கொள்ள அலையும்  பொழுது மோதுண்டு மோதுண்டு அடுத்தவனின் அலட்டிக்காத மசத்தனத்தைப் பார்த்ததும் வெடிக்கும் கோபம் அவனைச்சுடும் வெறியுடன் வார்த்தைகளில் வெளியாகும்.  இது தவிர்க்க முடியாதது. எழுத்தாளனே விரும்பாதது. .உலகமகா சாதனைகளை சாதிக்க வரவேற்க்கப்படாத பாதையின் எல்லையில் நின்று போராட்ட வடுக்களை சுமந்தது ஜடத்தன மனிதர்களின் பார்வையில்  கோமாளி  காற்று விசிறியில் மோதுண்டு   வாங்கிய வலியென்னும்  அலட்ச்சியம் மின்னினாலும் வடுக்கள் ஆறாதவை .........

 தொடரும்

No comments: