காமம்
தாண்டிய காதல்
என்னவென்று
அறியும் முன்
நடந்தேறியது
அவள் தன் விழி வழி
அவனைப்
புணர்ந்த மாயம்.
கொடுக்க
எதுவுமில்லை என்று
அவள்
சிவந்த மார்புகளின் காம்புகளை
லேசாய்
நிமிண்டி விட்டுச் சென்றான்
அவள்
விரும்பி புணர்ந்த கள்வன்.
அந்த
நிமிண்டலின் வலி பொருத்து
செல்லச்சிணுகளுடன்
வழி அனுப்பினாள்.
"கொஞ்சம்
இரு " என்று அவள்
அவனது
அடுத்த
வேலை உணவுக்காக
கொடுத்தனுப்பிய
பணத்தில் படிந்திருந்தது
அவளின்
காமம் தாண்டிய காதல்..
No comments:
Post a Comment